search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி எரித்து கொலை"

    சுவாமிமலை அருகே குடிபோதையில் மனைவியை எரித்து கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே உள்ள தீ மாங்குடி கிராமத்தில் வசிப்பவர் முருகானந்தம் (வயது 39). டிரைவர். இவரது மனைவி நிர்மலா (28) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று மதியம் முருகானந்தம் குடிபோதையில் வீட்டுக்கு வந்து நிர்மலாவிடம் தகராறு செய்துள்ளார்.

    அப்போது ஆத்திரமடைந்த முருகானந்தம் மண்எண்ணையை எடுத்து நிர்மலா மீது ஊற்றி தீவைத்து விட்டதாக கூறப்படுகிறது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ஹேமலதா, சப்-இன்ஸ்பெக்டர் காசிய்யா, ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கராபுரம் அருகே வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் மனைவியை கணவன் எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ரிஷிவந்தியம்:

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 42), தொழிலாளி. இவரது மனைவி உமா (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    ராஜா வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதை உமா கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்றும் ராஜா குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவி உமாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைந்த ராஜா வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உமா மீது ஊற்றி தீ வைத்தார்.

    இதில் உடல் கருகிய நிலையில் உமா உயிருக்கு போராடி அலறினார். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதைப்பார்த்ததும் ராஜா, மனைவி உமாவை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது உடலிலும் தீப்பற்றி காயம் ஏற்பட்டது.

    உடல் கருகிய நிலையில் இருந்த கணவன்-மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உமா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். ராஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து உமாவின் தாய் ராணி சங்கராபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×